பகுஜன் சமாஜ் மாநில தலைவர் படுகொலை – 8 பேர் சரண்

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் சரணடைந்துள்ளனர்.

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் நேற்று மாலை தனது வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்தார். அப்போது பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. இந்த கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங்கை அருகில் இருந்தவக்ரள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்திற்கு பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து, பகுஜன் சமாஜ் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் போலீசில் சரண்டைந்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு உள்பட 8 பேர் அண்ணாநகர் துணை ஆணையர் முன் சரணடைந்துள்ளனர்.

சரணடைந்த 8 பேரையும் கைது செய்த போலீசார் இந்த கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை – 8 பேர் சரண் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பம் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு 8 பேர் காவல் நிலையத்தில் சரண் #armstrong#thanthitv#chennai#peramburpic.twitter.com/oCfr0VIdog

— Thanthi TV (@ThanthiTV) July 5, 2024

You may also like

© RajTamil Network – 2024