Monday, September 23, 2024

ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது!

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது!பெரம்பூரில் இருந்து 20 கி.மீ தொலைவில், பொத்தூருக்கு ஆம்ஸ்ட்ராங் உடல் ஊர்வலமாக எடுத்துசெல்லப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங்  இறுதி ஊர்வலம்ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பெரம்பூரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில், செங்குன்றம் அருகேவுள்ள பொத்தூருக்கு ஆம்ஸ்ட்ராங் உடல் ஊர்வலமாக எடுத்துசெல்லப்படுகிறது.

இறுதி ஊர்வலத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், உறவினர்கள் மற்றும் மக்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தையொட்டி அந்த வழித்தடம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பெரம்பூரில் உள்ள பள்ளியில் ஆம்ஸ்ட்ராங் உடல் கட்சித் தொண்டர்கள், மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள கட்சியின் அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், செங்குன்றம் அருகேவுள்ள பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டது.

மேலும், பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் நினைவு மண்டபம் அமைத்துக்கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து பெரம்பூரில் இருந்து பொத்தூருக்கு ஆம்ஸ்ட்ராங் உடல் எடுத்துச்செல்லப்படுகிறது. அங்கு அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை மாலை படுகொலை செய்யப்பட்டார். 3 மோட்டாா் சைக்கிள்களில் வந்த 6 போ் கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டியதில், அவர் உயிரிழந்தார்.

குற்றவாளிகளைக் கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. விசாரணை தொடங்கப்பட்ட 4 மணிநேரத்தில் 8 பேர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024