Monday, September 23, 2024

காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். காஷ்மீரில் குல்காம் மாவட்டம் மாடர்கம் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அந்த கிராமத்தில் போலீசாரும், ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது, ஓரிடத்தில் மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதை எதிர்பாராத பாதுகாப்பு படையினர், சுதாரித்துக்கொண்டு பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை மூண்டது. தகவல் அறிந்து கூடுதல் படைகள் அங்கு வரவழைக்கப்பட்டன. இந்த சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும் 4 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை தேடுதல் வேட்டையில், பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024