டெல்லியில் தண்ணீர் பஞ்சம்: உ.பி., அரியானா முதல்-மந்திரிகளுக்கு டெல்லி மந்திரி அதிஷி கடிதம்

by rajtamil
0 comment 47 views
A+A-
Reset

புதுடெல்லி,

டெல்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதாலும், அரியானா அரசு டெல்லிக்கு தர வேண்டிய தண்ணீரில் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாலும் தற்போது டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனிடையே தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்கவும், தண்ணீர் வீணாவதை தடுக்கவும் டெல்லி நீர்வளத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் டெல்லியில் தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க உதவ வேண்டும் என உத்தர பிரதேசம் மற்றும் அரியானா மாநில முதல்-மந்திரிகளுக்கு டெல்லி நீர்வளத்துறை மந்திரி அதிஷி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இந்த நெருக்கடியான நேரத்தில் டெல்லி மக்களுக்கு உத்தர பிரதேசம், அரியானா கைகொடுக்க வேண்டும் என்று அதிஷி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், பருவமழை வரும் வரை ஒரு மாத காலத்திற்கு டெல்லிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024