தினேஷ் கார்த்திக் ஓய்வு – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

by rajtamil
0 comment 24 views
A+A-
Reset

தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வுபெறப் போவதாக நேற்று அறிவித்தார்.

சென்னை,

தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வுபெறப் போவதாக நேற்று அறிவித்தார். இதையொட்டி தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தினேஷ் கார்த்திக்-க்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் ஓய்வு செய்தியை படித்தறிந்தேன். அவர் மிகவும் யோசித்து இந்த முடிவை எடுத்துள்ளார் என்பதை புரிந்து கொள்கிறேன்.

இத்தனை ஆண்டுகளில் விளையாடிய அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக 20 ஓவர் போட்டிகளில் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதை பார்த்திருக்கிறோம்.

வாழ்கையில் பல்வேறு தடைகள் மற்றும் சவால்களை சந்தித்தபோதிலும், தினேஷ் கார்த்திக் ஒரு பீனிக்ஸ் பறவையை போல மீண்டு வந்திருக்கிறார். விளையாட்டுக்காக அவரது அர்ப்பணிப்பு என்பது எப்போதும் நம்மை ஊக்குவிக்கும். வாழ்க்கையின் அவரது அடுத்தகட்ட இன்னிங்ஸிலும் செழித்து வாழவும், எதிர்கால முயற்சிக்கும் வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hi @DineshKarthik Read your moving and heartfelt retirement note. However, I understand you have taken this decision after much contemplation. We have seen, in all these years, how you have given the best of your performance in all forms of cricket, particularly your exploits… https://t.co/lcJnNf6dyN

— Udhay (@Udhaystalin) June 1, 2024

You may also like

© RajTamil Network – 2024