பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் தமிழக வீரர் ஸ்ரீராம் பாலாஜி 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

by rajtamil
Published: Updated: 0 comment 26 views
A+A-
Reset

ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஸ்ரீராம் பாலாஜி – ரியேஸ் வரேலா ஜோடி 3-வது சுற்றுக்கு முன்னேறியது.

பாரீஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பாரீசில் களிமண் தரையில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீராம் பாலாஜி – ரியேஸ் வரேலா மார்ட்டினஸ் (மெக்சிகோ) ஜோடி, பிரான்சின் டேன் ஆடட் – தியோ அரிபேஜ் ஜோடியுடன் மோதியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஸ்ரீராம் பாலாஜி – ரியேஸ் வரேலா ஜோடி 6-4, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் டேன் – தியோ ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறியது.

You may also like

© RajTamil Network – 2024