தெற்காசிய நாடுகளில் ஒன்றான லாவோஸ் நாட்டிற்குப் பிரதமர் நரேந்திர மோடி அக். 10, 11 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: மெரினா சாகச நிகழ்ச்சியில் மட்டுமா? விமானப் படை அணிவகுப்பிலும் அதே நிலைதான்!
லாவோஸ் நாட்டில் 21வது ஆசிய-இந்தியா உச்சி மாநாடு மற்றும் 19வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு நடைபெறுகிறது. உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடிக்கு லாவோஸ் நாட்டின் பிரதமர் சோனேக்சே சிபாண்டோன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிக்க: ‘மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன்’ – இல்திஜா முஃப்தி
இந்த அழைப்பை ஏற்று இரண்டு உச்சி மாநாடுகளிலும் பிரதமர் மோடி கலந்துகொண்டு இருதரப்பு சந்திப்புகளை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து லாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.