அசாமில் நடிகையிடம் ஏமாந்த மருத்துவர்கள்: ஆன்லைன் வணிகத்தில் முதலீடு

குவகாத்தி: அசாம் மாநிலம் திப்ருகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மருத்துவர்கள், சர்ச்சைக்குள்ளான நடிகை சுமி போரஹ் மூலம் ஏமாற்றப்பட்டு, பிஷால் புகானின் ஆன்லைன் வணிகத்தில் பல லட்சத்தை முதலீடு செய்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு, காவல்துறை உயர் அதிகாரி அளித்த தகவலின்படி, சமுதாயத்தில் மிக முன்னணியில் உள்ள பலரின் பெயர்களும், புகான் நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்களின் பட்டியலில் உள்ளது. ஏராளமான மருத்துவர்கள், அதிக லாபம் கிடைக்கும் என்று எண்ணி, பெரிய தொகைகளை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். முதலீடு செய்த மருத்துவர்கள் காவல்துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் சிலரை விசாரணைக்கு அழைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்