தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள பதிவில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களிலும், காரைக்காலிலும் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.