அண்ணாமலை, அனைவரையும் விமர்சனம் செய்கிறார் – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க வேண்டுமென்றால் உளவுத்துறையை வலுபடுத்த வேண்டும். எல்லா அரசியல் கட்சிகளிலும் மக்களை அச்சுறுத்தும் ரவுடிகளை உறுப்பினர்களாக வைத்திருந்தால் தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கைப் பற்றி எப்படி பேச முடியுமா?. சட்டம் – ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பும், கடமையும் அனைவருக்கும் உள்ளது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அனைவரையும் விமர்சனம் செய்கிறார். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சிறை தண்டனை பெற்றவர் என விமர்சனம் செய்கிறார். நீத்தார் பெருமை என்று திருவள்ளூவர் கூறினார். ஒருவர் உயிரிழந்து விட்டால் அவரது பெருமை பேச வேண்டும் என்று திருவள்ளூவர் எழுதி வைத்துள்ளார்; ஆனால் உயிரிழந்தவர்களை சிறுமைப்படுத்தும் ஒரே கட்சி பாஜகதான். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

2025-இல் இந்தியாவில் க்வாட் மாநாடு: பிரதமர் மோடி

திருப்பதி லட்டு விவகாரம்: ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர் கைது

திருப்பதி லட்டு விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்