அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்றும் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை

விஷ சாராய விவகாரம் தொடர்பாக இன்றும் சட்டசபையில் கேள்வியெழுப்ப அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை,

கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது சட்டசபையில் நேற்று விவாதம் நடத்தப்பட்டது. ,முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விளக்கமளித்தார்.

நேற்று, விஷ சாராய உயிரிழப்புக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். மேலும் கேள்வி நேரத்தின்போது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர், முதல்-அமைச்சர் வேண்டுகோளின் பேரில் அதிமுகவினரை சபாநாயகர் அவைக்குள் அனுமதித்தார். இருப்பினும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விவாதத்தில் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புக்கு கண்டனம் தெரிவித்து இன்றும் சட்டசபைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர்.

மேலும் விஷ சாராய விவகாரம் தொடர்பாக இன்றும் சட்டசபையில் கேள்வியெழுப்ப அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திட்டமிட்டுள்ளனர்.

Related posts

ஒடிசா: வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை-மகள் பாம்பு கடித்து பலி

டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க ஆர்வம் காட்டும் ஸ்ரேயாஸ் ஐயர்!

வயநாடு, 24 பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்தது பாஜக