அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனை கூட்டம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.

சென்னை,

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 26-ம் தேதி சென்னையில் நடைபெறும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். எழும்பூர் அசோகா ஹோட்டலில் மாலை 4.30 மணியளவில், பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

இதில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைமை நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!