அனைத்து இந்திய மொழிகளுடனும் ஹிந்திக்கு பிரிக்க முடியாத உறவு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஹிந்தி அறிவிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அதில், “அனைத்து இந்திய மொழிகளும் நமக்கு பெருமையும் பாரம்பரியமுமானவை. அவற்றை வளப்படுத்தாமல் நாடு முன்னேற முடியாது. அதிகாரப்பூர்வ மொழியான ஹிந்தி அனைத்து இந்திய மொழிகளுடனும் பிரிக்க முடியாத உறவைக் கொண்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மேலும், “இந்த ஆண்டுடன் பொதுத் தொடர்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காக இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஹிந்தி அறிவிக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்து இந்திய மொழிகளையும் ஒன்றிணைத்துக் கொண்டு செல்வதற்கும், மேம்பட்ட இந்தியாவின் வளர்ச்சியை நிறைவேற்றுவதற்கும் அதிகாரப்பூர்வ மொழியான ஹிந்தி தொடர்ந்து பங்களிக்குமென்று நான் நம்புகிறேன்” என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.