அமராவதி அணையில் இருந்து 24-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு

திருப்பூர் மாவட்ட பாசன வசதிக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணை பழைய பாசனத்துக்குட்பட்ட ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்காரை கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய 8 பழைய ராஜ வாய்க்காலங்கள் உள்ளன.

இந்த பாசனப்பகுதிகளுக்கு, வருகிற 24-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 6-ந்தேதி வரை 135 நாட்களில், 80 நாட்கள் தண்ணீர் திறப்பு, 55 நாட்கள் தண்ணீர் அடைப்பு என்ற அடிப்படையில், முதல் போக பாசத்துக்காக அமராவதி அணையில் இருந்து 2 ஆயிரத்து 74 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திருப்பூர் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

வன்முறையைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: கிரண் ரிஜிஜு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜானி மாஸ்டர்!

பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்