அமித்ஷா அரசியல் சாணக்கியர் – உ.பி. முன்னாள் மந்திரி புகழாரம்

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அம்மாநில முன்னாள் மந்திரியும் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவருமான நரட் ராய், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை வாரணாசியில் சந்தித்துப் பேசி உள்ளார்.

பின்னர் இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், நரட் ராய், அமித் ஷாவுடன் எஸ்பிஎஸ்பி தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பரும் உள்ளனர்.

இதுகுறித்து நரட் ராய் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், "இந்தியாவின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சென்றவர் பிரதமர் மோடி. நாட்டின் புகழ்பெற்ற உள்துறை மந்திரிஅமித்ஷா அரசியல் சாணக்கியர்”.

இந்த இரண்டு பேரின் தீர்மானத்தின்படி, சமூகத்தின் கடைசி வரிசையில் உள்ள ஏழைகளுக்கும் அதிகாரம் அளிக்கும் சிந்தனை மற்றும் தேசியவாத சித்தாந்தத்தை நான் வலுப்படுத்துவேன். ஜெய் ஜெய் ஸ்ரீராம் என பதிவிட்டுள்ளார்.

இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தல் வரும் ஜூன் 1-ல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்