அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு மாணவர்கள் உள்பட 4 பேர் பலியாகினர். மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கி வைத்திருந்த மர்ம நபர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் இரு மாணவர்கள் மற்றும் இரு ஆசிரியர்கள் பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து சட்ட அமலாக்கத்துறை முகவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ. 2000 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர்

துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் இருந்த மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். இது தொடர்பான விடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

Related posts

கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 492-ஆக உயர்வு!

சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை