அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அமைச்சர் அன்பில் மகேஸ், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

அரசு நிகழ்ச்சிகள் மற்றும் துறைசார் பணிகளில் ஈடுபட்டு வந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸுக்கு செவ்வாய்க்கிழமை மாலை ஜீரண மண்டல பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

‘ தற்போதைய சூழலில்தான் காந்தியின் தேவை மிகுதியாக உள்ளது’ – மு.க. ஸ்டாலின்

இதையடுத்து சென்னை அமைந்தகரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதனடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் உடல் நிலை சீரானதால், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர், தற்போது வீடு திரும்பியுள்ளார்.

Related posts

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கு வசதியாக சறுக்குப்பாதை

ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது

குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை