அம்மனுக்கு எந்த நிற புடவை சாற்றினால் என்ன பலன்?

வீட்டில் சுப காரியங்கள் நடைபெற வேண்டும் என்று வேண்டுதல் உள்ளவர்கள் மஞ்சள் நிற புடவையை சாற்றலாம்.

ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் ஆலயங்கள் சென்று தங்களின் பிரார்த்தனைகளை இறைவனிடம் முன்வைப்பதும், பிரார்த்தனைகள் நிறைவேறினால் இறைவனுக்கு நேர்த்திக்கடனை செலுத்துவதும் வழக்கம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டிக்கொள்வார்கள். இதில், அம்மனுக்கு உகந்த நேர்த்திக்கடன் புடவை சாற்றுதல் ஆகும். அதிலும் ஒவ்வொரு பிரார்த்தனைக்கும் ஒவ்வொரு நிற புடவை சாற்றி வழிபடுவது மிகுந்த பலனை தரும் என்பது நம்பிக்கை.

குழந்தைக்கு நன்றாக பேச்சு வரவேண்டும் என்பதற்காகவும், ஆரோக்கியம் குறையாமல் இருக்கவும், திருமண தடை நீங்கவும், வீடு கட்டவும், கடன் தொல்லை நீங்கவும், இப்படி பலவகையான பிரார்த்தனைகளுக்கு தீர்வுகாண அம்மனுக்கு புடவை அல்லது ஆபரணங்களை சாற்றுவதாக வேண்டிக்கொள்வோம். இதில், என்னென்ன நிறத்தில் அம்மனுக்கு புடவை சாற்றினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

எதிரிகளிடம் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளவும், கண்திருஷ்டியில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், சிவப்பு நிறப் புடவையை அம்மனுக்கு சாற்றலாம். வீட்டில் சுப காரியங்கள் நடைபெற வேண்டும் என்று வேண்டுதல் உள்ளவர்கள் மஞ்சள் நிற புடவையை சாற்றலாம்.

பிள்ளைகள் நன்றாக கல்வி பயில வேண்டும் என்பதற்காகவும், வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், பச்சை நிற புடவையை சாற்றலாம்.

கிடைத்த வேலையை தக்க வைத்துக் கொள்ளவும், அல்லது நாம் செய்யும் வேலையில் முன்னேற்றமடைந்து உயர் பதவிக்கு செல்ல வேண்டும் என்றால் ஆரஞ்சு அல்லது வெளிர் சிவப்பு நிற புடவையை சாற்றலாம்.

குடும்பம் ஒற்றுமையாக இருக்கவும், குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் ஒற்றுமை மேம்படவும், வீட்டில் அன்பும் சந்தோஷமும் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காகவும், சந்தனம் அல்லது எலுமிச்சை நிற புடவையை அம்மனுக்கு சாற்றலாம்.

வீட்டில் செல்வம் பெருகவும், வீட்டிற்கு வந்த செல்வம் நிலைத்து இருக்கவும், சகல சவுபாக்கியங்களையும் பெற்று சிறப்பாக வாழவும் மாம்பழ நிற புடவையை அம்மனுக்கு சாற்றலாம்.

கருப்பு நிற புடவையையும், வெள்ளை நிற புடவையையும் அம்மனுக்கு சாற்றக்கூடாது.

சந்தன நிற புடவையை சரஸ்வதிக்கு சாற்றி வழிபடலாம்.

Related posts

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் தேரோட்டம்

அமிர்தயோக நேரத்தை அருளிய திருக்கடையூர் அமிர்தநாராயண பெருமாள் கோவில்