அயன் பட பாணியில் கேப்சூல்களில் தங்கம் கடத்தி வந்த பெண்!

அயன் பட பாணியில் கேப்சூல்களில் தங்கம் கடத்தி வந்த பெண்.. அலேக்காக தூக்கிய போலீசார்!

அயன் பட பாணியில் குஜராத்தில் நடந்த தங்கம் கடத்தல் சம்பவத்தால் போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அயன் படத்தில் கேப்சூல்களில் போதை பொருளை பதுக்கி அதை விழுங்கி வெளிநாடுகளுக்கு கடத்தி செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இதே போன்று டெல்லியில் உண்மையாகவே ஒரு சம்பவம் நடந்திருக்கும்.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் மற்ற நாடுகளில் இருந்து மலிவான விலைக்கு வாங்கி கடத்தலில் ஈடுபட்டு வருவதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில் குஜராத்தில் உள்ள சூரத் விமான நிலையத்தில், தங்கம் கடத்தி வந்த பெண்ணை சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் பிடித்துள்ளனர்.

விளம்பரம்

ஜூன் 7ஆம் தேதி, துபாயில் இருந்து சூரத் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய இந்த பெண்ணை போலீசார் சோதனை செய்தனர். அதில் அந்த பெண் பதற்றத்துடன் காணப்பட்டதால், எக்ஸ்ரே மூலம் பரிசோதனை செய்தனர். அப்போது அவரது மலக்குடலில் 2 கேப்சூல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் தங்கத்தை மீட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அந்த பெண்ணை சிறைபிடித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Smuggling

Related posts

பெங்களூருவில் அதிர்ச்சி: இளம்பெண் உடல் 30 துண்டுகளாக பிரிட்ஜில் இருந்த கொடூரம்

“ஏழுமலையானே என்னை மன்னித்துவிடு…” – பவன் கல்யாண் பதிவு

காவல் நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நவீன் பட்நாயக்