அரக்கோணம் யார்டில் பொறியியல் பணி: 8 மின்சார ரயில் சேவை மாற்றம்

அரக்கோணம் யார்டில் பொறியியல் பணி: 8 மின்சார ரயில் சேவை மாற்றம்

சென்னை: அரக்கோணம் யார்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், 8 மின்சார ரயில்களின் சேவையில் இன்று (ஆக.7) மாற்றம் செய்யப்பட உள்ளன. சென்னை சென்ட்ரல் – அரக்கோணத்துக்கு இன்று காலை 9.10,11.00 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள், திருவள்ளூர் – அரக்கோணம் இடையே ரத்து செய்யப்பட உள்ளன.

சென்னை சென்ட்ரல் – திருத்தணிக்கு இன்று காலை 10 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், திருவள்ளூர் – திருத்தணி இடையே ரத்து செய்யப்பட உள்ளது.

அரக்கோணம் – சென்னை சென்ட்ரலுக்கு இன்று காலை 11.15, நண்பகல் 12.00 ஆகிய நேரங்களில் புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள், அரக்கோணம் – திருவள்ளூர் இடையே ரத்து செய்யப்பட உள்ளன.

திருத்தணி – சென்னை சென்ட்ரலுக்கு இன்று நண்பகல் 12.35 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், திருத்தணி – திருவள்ளூர் இடையே ரத்து செய்யப்பட உள்ளது.

வேலூர் கண்டோன்மென்ட் – அரக்கோணத்துக்கு இன்று காலை 10மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சித்தேரி – அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படஉள்ளது.

சென்னை சென்ட்ரல் – திருப்பதிக்கு இன்று காலை 9.50 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், சென்னை சென்ட்ரல் – திருத்தணி இடையே ரத்து செய்யப்பட உள்ளது.

Related posts

நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணை

அதிகமான பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் – ராகுல் காந்தி அழைப்பு

எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்த பாஜக திட்டம்-உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு