ஆசிய அணிகள் ஸ்குவாஷ் போட்டி: பாகிஸ்தானிடம் வீழ்ந்த இந்தியா

பெண்கள் பிரிவில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் 0-3 என்ற கணக்கில் தென்கொரியாவிடம் தோற்று அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

டேலியன்,

22-வது ஆசிய அணிகள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள டேலியன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பாகிஸ்தானிடம் வீழ்ந்தது.

இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வேலவன் செந்தில்குமார் தனது ஆட்டத்தில் வெற்றி கண்டார். மற்ற இந்திய வீரர்களான ராகுல் பாய்தா, சுரஜ் குமார் சந்த் ஆகியோர் தோல்வியை சந்தித்தனர். இதன் பெண்கள் பிரிவில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் 0-3 என்ற கணக்கில் தென்கொரியாவிடம் தோற்று அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா