ஆந்திர துணை முதல்-மந்திரியாக பவன் கல்யாண் நியமனம்

அமராவதி,

ஆந்திர சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம், பா.ஜ.க., ஜனசேனா கூட்டணி அமோக வெற்றிபெற்றது. ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டசபை தொகுதிகளில் இந்த கூட்டணி 164 தொகுதிகளை கைப்பற்றியது.

இதையடுத்து, ஆந்திர முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். இதனை தொடர்ந்து ஆந்திர மந்திரி சபையில் யார் யாருக்கு பொறுப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. துணை முதல்-மந்திரியாக யார் நியமிக்கப்படுவார்? என்பது குறித்தும் எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையிலான மந்திரிசபையில் இடம்பெற்றுள்ள மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆந்திர துணை முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேசுக்கு மனிதவளத்துறை, ஐ.டி. மற்றும் தகவல் தொடர்புத்துறை வழங்கப்பட்டுள்ளது. ஆந்திர மந்திரிசபையில் மொத்தம் 25 பேர் இடம்பெற்றுள்ளனர்.

Related posts

10 பாசஞ்சர் ரயில்களில் அக்.1 முதல் படிப்படியாக 12 பெட்டிகளாக அதிகரித்து இயக்க முடிவு

ராகுலை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை: காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார் குற்றச்சாட்டு

சென்ட்ரல் – ஆவடி மின்சார ரயில் சேவை மாற்றம்