ஆபாச விடியோ விவகாரம்: நடிகை ஓவியா புகார்!

நடிகை ஓவியா, தன்னுடைய முகத்தை போலியாக சித்திரித்து ஆபாச விடியோ வெளியிடப்பட்டுள்ளதாகக் காவல்துறையில் புகார் செய்துள்ளார்.

நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் முழு கவனத்தையும் பெற்றவராக இருந்தார். களவாணி படத்தின் மூலம் அழகான நாயகியாக அறிமுகமானர், தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்தார். கலகலப்பு, மதயானைக்கூட்டம் படங்களில் நல்ல நடிப்பையும் வழங்கியிருந்தார்.

ஆனால், சினிமாவில் கிடைத்த புகழெல்லாம் ஒன்றுமில்லை என்கிற அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அவருக்கு மிகப் பெரிய வெளிச்சம் கிடைத்தது. பல லட்சம் ரசிகர்கள் ஓவியாவை பாராட்டிக்கொண்டிருந்த நாள்கள் அவை.

இதையும் படிக்க: எல்ஐகே முதல் பாடல்!

பிக்பாஸுக்குப் பின் 90 எம்எல் என்கிற படத்தில் நடித்தார். அப்படம், கலவையான விமர்சனங்களையே பெற்றது. சினிமாவின் கணக்குகள் புரியாது என்பதுபோல், இப்போது மொத்தமாக மார்க்கெட் இழந்த நடிகையாக இருக்கிறார்.

சில நாள்களுக்கு முன் எக்ஸ் தளத்தில் ஓவியாவின் ஆபாச விடியோ என ஒரு விடியோ பகிரப்பட்டது. அந்த விடியோவில், பெண்ணின் கையில் டாட்டூ இருந்ததால் ஓவியாதான் என ரசிகர்கள் இந்தியளவில் அவரை வைரலாக்கியதுடன் அந்த விடியோ அதிகளவில் பரப்பப்பட்டது.

விடியோ குறித்த கேள்விகளுக்கு ஓவியாவின் பதில்…

தொடர்ந்து, இன்ஸ்டாகிராமில் ஓவியா தன் புகைப்படத்தை வெளியிட்டார். அங்கு, காமெண்ட் செய்ய வந்த ரசிகர்களில் பலரும் அந்த விடியோ குறித்து ஓவியாவிடமே கேட்டனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, விடியோ வெளியானால் என்ன? என்பதுபோல் ஓவியா பதிலளித்தார். இதனால், அந்த விடியோவில் இருந்தது ஓவியாதான் என்று ரசிகர்கள் கருதினர்.

இதையும் படிக்க: ககன மார்கன் – விஜய் ஆண்டனியின் புதிய படம்!

இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் வெளியான இந்த ஆபாச விடியோ தன் முகத்தை போலியாகச் சித்திரித்து உருவாக்கப்பட்டது என காவல் ஆணையர் அலுவலகத்தில் ஓவியா புகார் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த புகாரில், விடியோவை உருவாக்கியவர்களின் மீதும் அதைப் பகிர்ந்தவர்களின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது