ஆபாச வீடியோவை பார்த்த சிறுமியை மிரட்டி உல்லாசம்… வீடியோ எடுத்து மிரட்டி அடுத்தடுத்து பலாத்காரம்

விருதுநகர்,

விருதுநகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, விடுமுறை தினங்களில் தனது தாயாரின் செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். இதை அறிந்த ராஜேஷ் (வயது 22) என்பவர் சிறுமிக்கு ஆபாச படங்களை அனுப்பியுள்ளார்.

பின்னர் ராஜேஷ், அந்த சிறுமியிடம் செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சிறுமி ஆபாசப்படம் பார்த்ததை அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்து விடுவதாக மிரட்டி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதனை வீடியோவாகவும் ராஜேஷ் பதிவு செய்தாராம்.

மேலும் அந்த வீடியோவை காட்டி மிரட்டி ராஜேஷ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் (24) ஆகிய இருவரும் சிறுமியை பாலியல் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார், இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், ராஜேஷ் மற்றும் சசிகுமார் ஆகிய இருவரையும் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related posts

மறைந்த பாடகர் எஸ்.பி.பி பெயரில் சாலை – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பாவம் செய்துவிட்டார் சந்திரபாபு நாயுடு.. கோவில்களில் பரிகார பூஜை: ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு

பெண் தபேதாரின் பணியிட மாற்றத்துக்கு காரணம் மேயரின் அகங்காரமா? – தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி