ஆப்கனில் நிலநடுக்கம்! தில்லி, ராஜஸ்தானிலும் நில அதிர்வு!

ஆப்கானிஸ்தானில் இன்று(வியாழக்கிழமை) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் 255 கிமீ ஆழத்தில் இன்று காலை 11.26 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இது ரிக்டர் அளவுகோலில் 5.7 எனப் பதிவாகியுள்ளதாகவும் தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.

இந்த நில அதிர்வு தில்லி, ராஜஸ்தானின் சில பகுதிகளில் உணரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!

EQ of M: 5.7, On: 29/08/2024 11:26:38 IST, Lat: 36.51 N, Long: 71.12 E, Depth: 255 Km, Location: Afghanistan.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0@DrJitendraSingh@OfficeOfDrJS@Ravi_MoES@Dr_Mishra1966@ndmaindiapic.twitter.com/6PsXboMuXc

— National Center for Seismology (@NCS_Earthquake) August 29, 2024

அதேபோல பாகிஸ்தானின் பஞ்சாபின் சில பகுதிகள், கைபர் பக்துன்க்வா, இஸ்லாமாபாத் பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.

ஆப்கனின் அஷ்காஷம் பகுதியில் இருந்து 28 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எதுவும் பதிவாகவில்லை.

முன்னதாக கடந்த ஆக. 16 ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் 4.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி மறுப்பா ? த.வெ.க. விளக்கம்

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் முன்பு விரைவில் முற்றுகை போராட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு