ஆம் ஆத்மியில் இணைந்தார் அசாம் முன்னாள் காங்கிரஸ் தலைவர்!

ஆம் ஆத்மியில் இணைந்தார் அசாம் முன்னாள் காங்கிரஸ் தலைவர்!காங்கிரஸில் இருந்து விலகி ஆம் ஆத்மியில் இணைந்தார் ரோமன் சந்திரா… ஆம் ஆத்மியில் இணைந்த ரோமன் சந்திரா போர்தாகூர்

அசாம் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ரோமன் சந்திரா போர்தாகூர் இன்று ஆம் ஆத்மியில் இணைந்தார். அவரை தில்லி அமைச்சர் அதிஷி வரவேற்றார்.

இதுதொடர்பாக அதிஷி கூறுகையில்,

ரோமன் சந்திரா நீண்ட காலமாக காங்கிரஸில் இருந்துவந்தவர். 2021ல் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

மேலும் அஸ்ஸாம் முதல்வரின் ஊழலுக்கு எதிராக அவர் குரல் எழுப்பியுள்ளார். இந்தாண்டு தொடக்கத்தில் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியை அவர் ராஜிநாமா செய்தார்.

இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து தன் பணியைத் தொடர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

திருப்பதி லட்டு விவகாரம்; சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்ய முடிவு

சந்திரபாபு நாயுடு கடவுளிடமே அரசியல் செய்கிறார் – ரோஜா

‘கோவில்களின் நிர்வாகம் பக்தியுள்ள இந்துக்களிடம் இருக்க வேண்டும்’ – சத்குரு ஜக்கி வாசுதேவ்