ஆயுத பூஜை: மெட்ரோ ரயில் சேவை மாற்றம்!

ஆயுத பூஜையையொட்டி நாளை(அக். 11) மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை கால அட்டவணைபடி இயங்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஆயுத பூஜையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (அக். 11), சனிக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும்.

மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை கீழ்கண்ட கால இடைவெளியில் அடிப்படையில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பெண்கள் பணிபுரியும் நிறுவனங்களில் உள்ளூர் புகார் குழு: அதிரடி உத்தரவு!

அதன்படி, காலை 8 முதல் 11 மணி வரை, மாலை 5 முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயங்கும்.

அதுபோல, காலை 5 முதல் 8 மணி வரை, காலை 11 முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஒடிசா: வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை-மகள் பாம்பு கடித்து பலி

டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க ஆர்வம் காட்டும் ஸ்ரேயாஸ் ஐயர்!

வயநாடு, 24 பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்தது பாஜக