இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்; விளையாடும் வீரர்களை அறிவித்த பாகிஸ்தான்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் 2 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

இதையடுத்து தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும், 3வது டெஸ்ட் தொடர் இன்று ராவல்பிண்டியில் தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும். இதன் காரணமாக இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும்.

இந்நிலையில், இந்த போட்டிக்கான விளையாடும் வீரர்களை (ஆடும் லெவன்) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் இந்த போட்டியிலும் விளையாட உள்ளனர்.

பாகிஸ்தான் அணி விவரம்; சைம் அயூப், அப்துல்லா ஷபீக், ஷான் மசூத் (கேப்டன், கம்ரான் குலாம், சவுத் ஷகீல் (துணை கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சல்மான் அலி ஆகா, அமீர் ஜமால், நோமன் அலி, சஜித் கான், ஜாஹித் மஹ்மூத்.

The men's national selection committee has confirmed Pakistan's playing XI for the third Test against England, starting in Rawalpindi on Thursday, 24 October.#PAKvENG | #TestAtHomepic.twitter.com/bkXGNhXYBu

— Pakistan Cricket (@TheRealPCB) October 23, 2024

Related posts

Mumbai: BEST Struggles To Meet Demand Of 3.5 Million Daily Passengers As Bus Fleet Shrinks Below 3,000

Navi Mumbai: 55-Year-Old Man Murders Live-In Partner Under Alcohol Influence In Panvel; Accused Previously Served Time For Wife’s Murder

Maharashtra Coastal Zone Authority Directs Raigad Collector To Probe CRZ Violations In Navi Mumbai PMAY Scheme