இந்தியாவில் பாம்பு கடியால் ஆண்டு ஒன்றுக்கு 58 ஆயிரம் பேர் மரணம்!

இந்தியாவில் பாம்பு கடிப்பதால் ஆண்டு ஒன்றுக்கு 58 ஆயிரம் பேர் மரணம்… அதிர்ச்சி தரும் ஆய்வு தகவல்!

மாதிரி படம்

இந்தியாவில் பாம்பு கடிப்பதால் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு 58 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு நாட்களுக்கு முன் (ஜூலை 16) உலக பாம்பு தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. உலகெங்கிலும் உள்ள 3,000க்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளில் அவற்றின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளுடைய நோக்கம். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து பாம்புகளிலும், 600 இனங்கள் மட்டுமே விஷம் கொண்டவையாக உள்ளன. அவற்றில் ஏழு சதவீதம் மட்டுமே மனிதனைக் கொல்லும் அல்லது கடுமையாக காயப்படுத்தும் திறன் கொண்டவை.

விளம்பரம்

இந்தியாவில் பாம்புக்கடியால் இறப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 58,000 பேர் பாம்பு கடியால் இறக்கின்றனர். இந்தியாவில் 2000-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை சுமார் 12 லட்சம் பேர் பாம்புக் கடியால் இறந்துள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இந்த இறப்புகளில் 97 சதவீதம் கிராமப்புறங்களில் நிகழ்ந்துள்ளன. பெண்களை விட பாம்பு கடியால் இறக்கும் ஆண்களின் சதவீதம் அதிகம். இதற்கு ஆண்கள் வயல்களில் வேலை செய்வதும் ஒரு காரணம். இந்தியாவில் சில மாநிலங்கள் பாம்பு கடியால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. பல மாநிலங்கள் வயல்களில் பாம்பு கடியால் இறந்தவர்களை பேரழிவாக அறிவித்துள்ளன. இதன் காரணமாக, பாம்பு கடித்து இறந்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்குகிறது.

விளம்பரம்இதையும் படிங்க – உங்க பெயரில் இத்தனை சிம் கார்டுகள் இருக்கா…? நீங்க சிறைக்கு செல்ல நேரலாம்!

2022 இல் பாம்பு கடித்து இறந்தால், இறந்தவரின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று பீகார் அரசு அறிவித்தது. கேரளாவில் பாம்பு கடித்து இறந்தால் மாநில அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குகிறது. முன்பு கேரள அரசு 5 லட்சம் ரூபாய் கொடுத்து வந்தது. ஆனால் கேரள மாநில மனித உரிமைகள் ஆணையம், இந்த இழப்பீடு மிகவும் குறைவு என்றும், அதை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டது.

விளம்பரம்

உத்தரப்பிரதேச அரசு பாம்பு கடியால் ஏற்படும் மரணத்தை விபத்தாக கருதுகிறது. உ.பி.யில், பாம்பு கடித்து இறந்தால், அரசு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குகிறது. உயிரிழப்போர் விவசாயியாக இருந்தால், விவசாயிகளின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகையுடன் சேர்த்து மேலும் ஒரு லட்சம் ரூபாய் குடும்பத்திற்கு வழங்கப்படும்.

இழப்பீடு பெறுவது எப்படி?

பாம்பு கடித்து ஒருவர் இறந்தால், இழப்பீடு பெற, பிரேத பரிசோதனை அறிக்கையை, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் பெறுவது அவசியம். அதன் அடிப்படையில் குடும்பம் நிதி உதவி பெறலாம். எனவே, சம்பவத்திற்குப் பிறகு, குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக பிரேத பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். இதற்குப் பிறகு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் ஆவண செயல்முறை (Paper Work) முடிக்கப்படுகிறது. இது பேரிடரால் ஏற்படும் மரணம் என்பதால், மாநில அரசு விதிகளின்படி தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து, பாதிக்கப்பட்டவரின் உறவினர்களின் வங்கிக் கணக்கிற்கு 48 மணி நேரத்திற்குள் இழப்பீட்டுத் தொகையை அனுப்புகிறது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
snake

Related posts

கள்ளக்குறிச்சிக்கு பணியிட மாற்றமா? – அலறியடித்து ஓடும் அரசு ஊழியர்கள்

“அவரது உழைப்பும், சேவையும் என்றென்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும்” – பாப்பம்மாளுக்கு கமல்ஹாசன் புகழஞ்சலி

புதுச்சேரியில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு கட்டணத்தை உரிய காலத்துக்குள் செலுத்துவோம்: கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி தகவல்