இந்தியாவுக்கு எதிரான சவாலுக்கு ஆஸி. தயாராக இல்லை: முன்னாள் ஆஸி. வீரர்

இந்தியாவுக்கு எதிரான சவாலுக்கு ஆஸி. தயாராக இல்லை: முன்னாள் ஆஸி. வீரர்இந்தியாவுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய அணி தயாராக இருக்கவில்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.படம் | AP

இந்தியாவுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய அணி தயாராக இருக்கவில்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி மோதியது. இந்தப் போட்டியில் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதன் மூலம், அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய அணி தயாராக இருக்கவில்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி தயாராக இருக்கவில்லை என நினைக்கிறேன். மிட்செல் ஸ்டார்க் சிறப்பாக பந்துவீசவில்லை. பந்து ஸ்விங் ஆகவில்லையென்றால், அதற்கேற்றவாறு மிட்செல் ஸ்டார்க் பந்துவீச வேண்டும். ஆனால், அவர் அவ்வாறு செய்யாததால் ரோஹித் சர்மா அவரது ஓவரில் 29 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கிலும் சொதப்பியதால், தோல்வியடைந்தது. ஹார்திக் பாண்டியா கொடுத்த எளிய கேட்ச்சை மிட்செல் மார்ஷ் தவறவிட்டார். அதன்பின், ஹார்திக் 22 ரன்கள் எடுத்தார். அந்த ரன்கள் மிகவும் முக்கியமானவை என்றார்.

Related posts

இந்தியா-ஜப்பானின் வலிமையான உறவுகள், உலகளாவிய வளத்திற்கு சிறந்தவை: பிரதமர் மோடி

அரசியலுக்கு பணம் சம்பாதிக்க வரவில்லை: கெஜ்ரிவால் பேச்சு

திருப்பதி லட்டு விவகாரத்திற்காக பரிகாரம் – 11 நாட்கள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்