இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது: டி.ஆர்.பாலு

புதுடெல்லி,

இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு டி.ஆர்.பாலு எம்.பி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா படுதோல்வி அடையும். பெரும்பான்மை பெறக்கூடிய எண்ணிக்கையை இந்தியா கூட்டணி நிச்சயம் பெறும். கட்சி வாரியாக வெற்றி பெற்ற விவரங்கள் உடனே ஜனாதிபதியிடம் அளிப்போம். பிரதமர் வேட்பாளரை அறிவிக்காதது இந்தியா கூட்டணிக்கு பின்னடைவாக இருக்காது. பிரதமர் யார் என்பது ஜூன் 4 ஆம் தேதி இரவு அல்லது 5 ஆம் தேதி காலை முடிவு செய்வோம்" என்றார்.

Related posts

நிதித்துறை செயலராக துஹின் காந்தா பாண்டே நியமனம்

பள்ளி விடுதியில் தீ விபத்து: பலியான மாணவர்கள் எண்ணிக்கை 21ஆக உயர்வு

ரஷியா-உக்ரைன் மோதலை நிறுத்த இந்தியாவால் உதவ முடியும் – இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி