‘இந்தியா’ கூட்டணி ஆலோசனை கூட்டம் தொடங்கியது.. ராகுல்காந்தி, கெஜ்ரிவால் பங்கேற்பு

புதுடெல்லி,

'இந்தியா' கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் சிங் மான், சரத்பவார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் கூட்டம் நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுகள் சாதகமாக வந்தால் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ராகுல் காந்திக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள்.. பா.ஜ.க. தலைவர்கள் மீது போலீசில் புகார் அளித்தது காங்.

கெஜ்ரிவால் ஒரு வாரத்தில் அதிகாரப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவார்: ஆம் ஆத்மி

நிபா வைரசுக்கு வாலிபர் பலி: கேரள மந்திரி வீணா ஜார்ஜ் விளக்கம்