இந்திய இளையோர் காங். தலைவராக உதய் பானு சிப் நியமனம்!

இந்திய இளையோர் காங்கிரஸ்(ஐஒய்சி) தலைவராக உதய் பானு சிப் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக, இந்திய இளையோர் காங்கிரஸ் தலைவராக இருந்த ஸ்ரீநிவாஸ் பி வி-க்கு பதிலாக உதய் பானு சிப் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீநிவாஸ் பி வி தலைமையில், இளையோர் காங்கிரஸ் உறுப்பினர்கள் கரோனா பெருந்தொற்று காலத்தில் சமூகத் தொண்டாற்றியதுடன் நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்திய இளையோர் காங்கிரஸ் பொதுச் செயலராக இருந்த உதய் பானு சிப் தற்போது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இன்று வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீநிவாஸ் பி வி கட்சிக்கு ஆற்றிய பங்களிப்பை பாராட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜம்முவின் பலௌரா பகுதியை சேர்ந்த உதய் பானு சிப் காங்கிரஸ் தலைவர் ஹரி சிங் சிப்பின் மகன் ஆவார்.

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!