இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

இசிஐ திருச்சபை பேராயரும், இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவருமான எஸ்றா சற்குணம் (85) உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை(செப்.22) காலமானார்.

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருக்கும் அவரது மகளிடம் தந்தை உயிரிழந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சென்னைக்கு விரைவில் வந்தடைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்துவதுடன், அவரது குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவிக்கவுள்ளார்.

அவரது உடல் வரும் 26-ஆம் தேதி ஜீசஸ் கால்ஸ் சர்ச்சில் இருந்து மாலை 3 மணி அளவில் கீழ்பாக்கம் கல்லறைக்கு கொண்டு சென்று அங்கு நல்லடக்கம் செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!

அஜ்மீரில் இருதரப்பு மோதல்; ஒருவர் சுட்டுக்கொலை: ஜேசிபி வாகனத்துக்கு தீ வைப்பு!