“இந்திய ராணுவம் சிறப்பாக செயல்படுகிறது” – பினராயி விஜயன் பாராட்டு!

“நிலச்சரிவு மீட்பு பணியில் இந்திய ராணுவம் சிறப்பாக செயல்படுகிறது” – பினராயி விஜயன் பாராட்டு!

பினராயி விஜயன்

நிலச்சரிவு மீட்புப் பணியில் இந்திய ராணுவம் சிறப்பாக செயல்படுவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்தார்.

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் பினராயி விஜயன் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார். இதனைதொடர்ந்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன், ஆற்றில் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடரும் என்று கூறினார்.

இப்பேரிடரில் உயிரிழந்த மனிதர்கள் மற்றும் விலங்குகளை முறையாக அடக்கம் செய்ய 3 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் பினராயி விஜயன் கூறினார்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Chief Minister Pinarayi Vijayan
,
Wayanad

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்