இந்தோனேசியாவில் படகு தீப்பிடித்து விபத்து: 5 பேர் பலி

ஜகர்த்தா,

இந்தோனேசியாவின் வடக்கு மலுகு தீவில் பெனி லவோஸ் மாகாணத்தில் கவர்னர் தேர்தல் நடைபெற உள்ளது. கவர்னர் வேட்பாளரான பென்னி என்பவர் தனது ஆதரவாளர்களுடன் அங்குள்ள பகுதிகளுக்கு படகில் சென்று பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த படகில் தீப்பிடித்தது.

காற்றின் வேகம் காரணமாக படகு முழுவதும் மளமளவென தீ பரவி எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் படகு தீக்கிரையாகி சாம்பலானது. இந்த விபத்தில் படகில் இருந்த 5 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.��

Related posts

முக்கிய வழக்குகளை மீண்டும் தோண்டி எடுத்து விசாரணை: இலங்கை புதிய அரசு உத்தரவு

லெபனானை முழு பலத்துடன் ஆதரிப்போம் – ஈரான்

ஈராக்கில் இருந்து இஸ்ரேல் மீது டிரோன் தாக்குதல்