இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்; முதல் சுற்றிலேயே வெளியேறிய ஆகர்ஷி காஷ்யப்

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெற்று வருகிறது.

ஜகர்த்தா,

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நேற்று தொடங்கியது. மொத்தம் ரூ.10¾ கோடி பரிசுத்தொகைக்கான இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த போட்டியில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனான் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்ட தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனான் 21-18, 21-6 என்ற செட் கணக்கில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப்பை வீழ்த்தினார். இந்த தோல்வியின் மூலம் ஆகர்ஷி காஷ்யப் முதல் சுற்றிலேயே தொடரில் இருந்து வெளியேறினார்.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா