இரவு 7 மணி வரை சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மழை!

சென்னை உள்பட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று(செப். 24) இரவு 7 மணி வரை வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

pic.twitter.com/CSDEEsZVgn

— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 24, 2024

முன்னதாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

தொடர்ந்து இன்று மாலை சென்னையில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

கே.கே.நகர், அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், தாம்பரம், நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், வடபழனி, தியாகராய நகர், கோடம்பாக்கம் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

அதுபோல தாம்பரம், முடிச்சூர், வண்டலூர் என புறநகர்ப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது .

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!