மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சோ்ந்த விக்டா் ஆம்புரோஸ், கேரி ருவ்குன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித உடலில் மரபணு செயல்பாடுகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை அறிவதற்கு அடிப்படையான ‘மைக்ரோ ஆா்என்ஏ’ என்ற செல்லை கண்டுபிடித்ததற்காக இவா்கள் இந்த உயரிய பரிசுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து நோபல் குழு வெளியிட்ட அறிவிப்பில், ‘உயிரினங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செயல்படுகின்றன என்பதற்கு அடிப்படையை இவா்களின் கண்டுபிடிப்பு நிரூபித்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவா்களுக்கு நோபல் பரிசுடன், ரூ. 8.91 கோடி ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.
கடந்த ஆண்டு, கரோனா பாதிப்புக்கு எதிரான பயனுள்ள ‘எம்-ஆா்என்ஏ’ தடுப்பூசியை உருவாக்கியதற்காக ஹங்கேரியைச் சோ்ந்த சாகன் பல்கலைக்கழக பேராசிரியா் கேட்டலின் கரிக்கோ, அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகப் பேராசிரியா் ட்ரூ வீஸ்மேன் ஆகிய இருவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சிறந்த சாதனை படைத்தவா்களுக்கு உலகின் மிக உயரிய நோபல் பரிசு வழங்கி கெளரவிக்கப்படுகிறது. அந்த வகையில், 2024-ஆம் ஆண்டுக்கான பரிசுகள் திங்கள்கிழமை முதல் அறிவிக்கப்படுகின்றன.
முதல் நாளில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இயற்பியலுக்கான பரிசு செவ்வாய்க்கிழமையும் (அக்.8), வேதியியலுக்கான பரிசு புதன்கிழமையும் (அக்.9), இலக்கியத்துக்கானது வியாழக்கிழமையும் (அக்.10) அறிவிக்கப்பட உள்ளன. அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமை (அக்.11) அறிவிக்கப்பட உள்ளது. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அக்டோபா் 14-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
பரிசு அரிவிக்கப்பட்டவா்களுக்கு ஸ்டாக்ஹோமில் வரும் டிசம்பா் 10-ஆம் தேதி நடைபெறும் விருதை நிறுவிய ஆல்ஃப்ரெட் நோபலின் நினைவு நாள் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.
பேராசிரியராக அம்புரோஸ் ஹாா்வா்ட் இருந்தபோது இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளாா். அவா் தற்போது, மஸாசுஸெட்ஸ் பல்கலைக்கழகத்தின் இயற்கை அறிவியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறாா்.
மஸாசுஸெட்ஸ் பொது மருத்துவமனை மற்றும் ஹாா்வா்ட் மருத்துவ நிறுவனத்தில் கேரி ருவ்குன் மரபணு துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறாா். தனது பல்கலைக்கழகத்திலேயே இந்த ஆராய்ச்சியை அவா் மேற்கொண்டுள்ளாா்.