இளைஞரணிப் படையை வழிநடத்திச் செல்லும் உதயநிதிக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து

திமுக இளைஞரணி இன்று 45-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

சென்னை,

திமுக இளைஞரணி இன்று 45-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நிலையில், இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

"45-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது திமுக இளைஞரணி. இளைஞரணிப் படையைச் சிறப்பாக வழிநடத்திச் செல்லும் தம்பி

உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டுகள்! வாழ்த்துகள்!

கழகக் கொள்கைகளையும் வரலாற்றையும் இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றாற்போல் எடுத்துச் சென்று, அவர்களை அரசியல் விழிப்புணர்வும் கொள்கைத் தெளிவும் பெற்றவர்களாக வார்த்தெடுப்பீர்கள் எனக் கழகத் தலைவராக நம்புகிறேன்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

2025-இல் இந்தியாவில் க்வாட் மாநாடு: பிரதமர் மோடி

திருப்பதி லட்டு விவகாரம்: ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர் கைது

திருப்பதி லட்டு விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்