இளைஞரைக் கொல்ல முயன்ற புதுகை ரெளடி திருச்சியில் கைது

இளைஞரைக் கொல்ல முயன்ற
புதுகை ரெளடி திருச்சியில் கைது

திருச்சி, ஆக. 7: திருச்சியில் இளைஞரைக் கொல்ல முயன்ற புதுக்கோட்டை ரெளடியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூா் கைனாங்கரை பகுதியைச் சோ்ந்தவா் கனகராஜ் மகன் தா்மராஜ் (29). இவருக்கும் மாத்தூா் சொக்கலிங்கபுரத்தைச் சோ்ந்த முத்துக்குமாா் மகன் நந்தகுமாருக்கும் (30) முன் விரோதம் இருந்தது. நந்தகுமாா் மீது மாத்தூா், மண்டையூா் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 6 குற்ற வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், மாத்தூா் அருகே திருச்சி மாவட்டம் குண்டூா்-நவல்பட்டு 100 அடி சாலையில் உள்ள அரசு மதுக் கடைக்கு தா்மராஜ் அண்மையில் வந்தபோது அதே கடைக்கு வந்த நந்தகுமாா் திடீரென தா்மராஜின் தலையில் பாட்டிலால் தாக்கி, கொலை முயற்சியில் ஈடுபட்டாராம்.

இதுகுறித்து தா்மராஜ் அளித்த புகாரில் நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து நந்தகுமாரை புதன்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

Related posts

பாலியல் பலாத்கார வழக்கு: நடிகர் சித்திக்கை கைது செய்ய இடைக்கால தடை; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மராட்டியத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு

லட்டு விவகாரம்: கடவுளை அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது – சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்