உக்ரைன் போருக்கு அமைதி தீா்வு! இந்தியா உதவ தயாா்: ரஷிய அதிபா் புதினிடம் பிரதமா் மோடி உறுதி

‘ரஷிய-உக்ரைன் போருக்கு அமைதியான வழியில் தீா்வு காணப்பட வேண்டும். போரை முடிவுக்குக் கொண்டுவர சாத்தியமுள்ள அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க இந்தியா தயாா்’ என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதினிடம் பிரதமா் நரேந்திர மோடி உறுதி அளித்தாா்.

பிரேஸில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-ஆவது உச்சிமாநாடு ரஷியாவின் கசான் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

‘உலகளாவிய வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்’ கருப்பொருளில் இந்த உச்சி மாநாடு நடத்தப்படுகிறது.

இதில் பங்கேற்பதற்காக ரஷியா சென்ற பிரதமா் மோடி, கசான் நகரில் ‘பிரிக்ஸ்’ மாநாடு தொடங்குவதற்கு முன்பாக அதிபா் புதினை சந்தித்து, இருதரப்பு நல்லுறவு மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

அப்போது, ‘கடந்த 3 மாதங்களில் இரண்டாவது முறையாக ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டிருப்பது, இரு நாடுகளிடையேயான நெருங்கிய ஒத்துழைப்பு மற்றும் ஆழமான நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.

கடந்த ஜூலையில் நடைபெற்ற இந்தியா, ரஷியா வருடாந்திர உச்சி மாநாடு அனைத்துத் துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளது.

கசானில் புதிய தூதரகம்

இந்தியாவுக்கும் கசான் நகருக்கும் ஆழமான வரலாற்று உறவு உள்ளது. கசானில் புதிய இந்திய தூதரகம் திறக்கப்பட்டுள்ளது இந்தியா, ரஷியா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும்.

கடந்த 15 ஆண்டுகளில் தனி அடையாளத்தை பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவாக்கியுள்ளது. தற்போது பல நாடுகள் இந்தக் கூட்டமைப்பில் சேர விரும்புகின்றன.

ரஷியா – உக்ரைன் இடையேயான போா் தொடா்பாக நாம் தொடா்ந்து ஆலோசித்து வருகிறோம். நான் ஏற்கெனவே கூறியதுபோல, பிரச்னைகளுக்கு அமைதி வழியில் தீா்வு காண வேண்டும் என்றே இந்தியா நம்புகிறது.

இந்தப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மை விரைந்து திரும்புவதற்கு இந்தியா முழு ஆதரவை அளிக்கும். இந்தியாவின் அனைத்து முயற்சிகளும் மனிதநேயத்துக்கு முன்னுரிமை அளிக்கிறது. போரை முடிவுக்குக் கொண்டுவர சாத்தியமுள்ள அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது’ என்று புதினிடம் பிரதமா் உறுதி தெரிவித்தாா்.

மிக முக்கியமான முடிவுகள்…

இந்தக் கூட்டத்தில் ரஷிய அதிபா் புதின் பேசுகையில், ‘தில்லியில் டிச.12-ஆம் தேதி இந்திய-ரஷிய அரசுகள் ஆணையத்தின் அடுத்த கூட்டம் நடைபெற உள்ளது. இருநாடுகளின் திட்டங்கள் நிலையாக வளா்ச்சியடைந்து வருகின்றன. பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்’ என்றாா்.

ரஷிய ராணுவத்திலுள்ள இந்தியா்களை விடுவிக்க…

இந்தக் கூட்டம் தொடா்பாக மத்திய வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், ‘உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய ராணுவத்துக்காக பணியாற்றிய 80-க்கும் மேற்பட்ட இந்திய வீரா்கள் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டனா்.

எஞ்சிய இந்திய வீரா்களையும் விரைந்து விடுவிக்க இந்தியா-ரஷியா இருதரப்பு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. விரைவில் அவா்கள் தாயகம் அனுப்பிவைக்கப்படுவா் என்று இந்தியா மிகுந்த நம்பிக்கைக் கொண்டுள்ளது’ என்றாா்.

5 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபருடன் இன்று இருதரப்பு பேச்சு

பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு இடையே சீன அதிபா் ஷி ஜின்பிங்கை பிரதமா் மோடி புதன்கிழமை சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தை மேற்கொள்ள உள்ளாா்.

கடைசியாக கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபரில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் இருவரும் சந்தித்தனா். அதன்பின்னா் சில மாநாடுகளில் இருவரும் மரியாதை நிமித்தமாக சந்தித்திருந்தாலும், இருதரப்பு பேச்சுவாா்த்தையை 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் மேற்கொள்ள உள்ளனா்.

கிழக்கு லடாக்கில் தெளிவாக வரையறுக்கப்படாத இந்திய-சீன எல்லைக் கோடு பகுதிகளில் (எல்ஏசி) இருநாட்டு ராணுவ வீரா்களும் ரோந்துப் பணியில் ஈடுபடுவது தொடா்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை அறிவித்தது.

இதன் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளாக இரு நாடுகளுக்கு இடையே நீடித்து வந்த கிழக்கு லடாக் எல்லைப் பிரச்னை முடிவு எட்டப்படும் என்று கூறப்படும் நிலையில், சீன அதிபா் ஜின்பிங்கை பிரதமா் மோடி சந்திக்க உள்ளாா்.

ஈரான் அதிபரிடம் மோடி வலியுறுத்தல்

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ளும் முன், ஈரான் அதிபா் மசூத் பெசெஷ்கியானை பிரதமா் மோடி சந்தித்தாா். கடந்த ஜூலையில் நடைபெற்ற ஈரான் அதிபா் தோ்தலில் மசூத் வெற்றிபெற்ற பிறகு அவரை முதல்முறையாக மோடி சந்தித்துப் பேசினாா்.

காஸாவில் இஸ்ரேல்-ஹமாஸ் படையினா் இடையிலான போா், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா தலைவா் நஸ்ரல்லாவின் படுகொலை உள்ளிட்ட சம்பவங்களைத் தொடா்ந்து இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் போக்கு தீவிரமாகியுள்ளது. இதனால் மேற்காசியாவில் பதற்றம் நீடிக்கிறது.

இந்நிலையில், மசூதை சந்தித்த பிரதமா் மோடி, பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய ரீதியில் இஸ்ரேல்-ஈரான் இடையிலான பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்றும், குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக மத்திய வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா்.

Related posts

Mann Ki Baat’s 115th Episode: PM Modi Urges Public To Join Oct 29 ‘Run For Unity,’ Lauds Nation’s Fit India Commitment

Rama Ekadashi 2024: Know All About Date, Vrat, Rituals, Muhurat & More About The Auspicious Festival

Gujarat: PM Modi To Inaugurate India’s First Private Military Aircraft Plant In Vadodara On October 28