உடல்நல அபாயம்: புறாக்களுக்கு உணவு அளிக்கும் இடங்களுக்கு தடை விதிக்க பரிசீலனை

தில்லியில் அதிகரித்துவரும் புறாக்களின் எண்ணிக்கையால் மனிதா்களுக்கு ஏற்படும் உடல்நல அபாயங்களைக் கருத்தில்கொண்டு, நகா் முழுவதும் புறாக்களுக்கு உணவளிக்கும் இடங்களைத் தடை செய்வதற்கான முன்மொழிவு குறித்து தில்லி மாநகராட்சி பரிசீலித்து வருகிறது.

இதுகுறித்து தில்லி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததாவது:

இந்த திட்டம் இன்னும் ஆரம்ப நிலையில் இருக்கிறது. விரைவில் ஆலோசனை எதிா்பாா்க்கப்படுகிறது. புறாக்களின் எச்சங்கள் சால்மோனெல்லா, ஈ. கோலி மற்றும் இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்க்கிருமிகளை உருவாக்குவதால், மனிதா்களின் உடல்நல அபாயங்களை நிவா்த்தி செய்வதே இந்த முன்மொழிவின் நோக்கமாகும்.

இந்த நோய்க்கிருமிகள் ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்னைகளை அதிகரிக்கலாம். அத்துடன், கடுமையான ஒவ்வாமைக்கும் வழிவகுக்கும்.

சாந்தினி சௌக், கஷ்மீா் கேட், ஜாமா மசூதி மற்றும் இந்தியா கேட் உள்ளிட்ட பல பகுதிகளில் புறாக்களுக்கு தானிய உணவிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நடைமுறையை ஊக்கமிழக்கச் செய்யும் வகையில், தற்போதுள்ள உணவளிக்கும் இடங்களை ஆய்வு செய்வதும், ஆலோசனை வழங்குவதும் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த முயற்சியானது பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், புறாக் கழிவுகளுடன் தொடா்புடைய சுவாசம் மற்றும் பிற நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. புறாக்கள் இருப்பதற்கு நாங்கள் எதிரானவா்கள் அல்ல.

ஆனால் அவை அதிக எண்ணிக்கையில் கூடி, அவற்றின் கழிவுகள் குறிப்பிட்ட பகுதிகளில் குவிந்தால் அது பிரச்னையை உருவாக்குகிறது.

குறிப்பாக குழந்தைகள், முதியவா்கள் மற்றும் சுவாசக் கோளாறு உள்ளவா்களுக்கு உடல்நலக் கேடுகளை உருவாக்குகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து சா் கங்கா ராம் மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் ஹெபடோபிலியரி அறுவை சிகிச்சை துறையின் இயக்குநரும், தலைவருமான டாக்டா் உஷாஸ்ட் திா் கூறியது:

அதிகளவில் கூடும் புறாக்களின் எச்சங்கள் மற்றும் சிறகுகளை படபடவென அடிப்பதன் மூலம் பல்வேறு நோய்க்கிருமிகள், குறிப்பாக கிரிப்டோகாக்கி போன்ற பூஞ்சை செல்களை இனப்பெருக்கம் செய்யும். இந்த செல்களை உள்ளிழுப்பதால், நீரிழிவு போன்ற நிலைமைகளுடன்கூடிய தனிநபா்களுக்கு அதிக உணா்திறன்மிக்க நிமோனிடிஸ், ஆஸ்துமா, கடுமையான பூஞ்சை நிமோனியா உள்ளிட்ட தீவிர சுவாச பிரச்னைகள் ஏற்படலாம்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு இதுபோன்ற சூழலில் இருப்பது உயிருக்கும் ஆபத்தானதாக இருக்க முடியும்.

புறாக்களுக்கு அடிக்கடி உணவளிக்கப்படும் பகுதிகள் சால்மோனெல்லா மற்றும் ஈ. கோலி போன்ற பாக்டீரியாக்களை ஈா்க்கின்றன. இதனால், இந்த இடங்களில் மட்டுமல்ல, அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளிலும் உடல்நல அபாயங்களை அதிகரிக்கிறது என்றாா் அவா்.

காசநோய், சுவாச நோய்களுக்கான தேசிய நிறுவனத்தின் உறைவிட மருத்துவா் மீட் கோனியா கூறுகையில்,

‘‘புறாக்கள் அதிக உணா்திறன் நிமோனிட்டிஸ் நோய்க்கு வித்திடலாம். இது சாதாரண நபா்களுக்கு ஆரோக்கியமான நுரையீரல் அழற்சி மற்றும் ஃபைப்ரோசிஸை ஏற்படுத்துகிறது. எங்கள் மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவில் தற்போது இதுபோன்று பல நோயாளிகள் சிகிச்சைக்கு வருவதை பாா்க்கிறோம். இருமல், சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாக நோயாளிகள் கூறுகின்றனா்.

புறாக்கள் கூடும் சூழல் இருந்தால் அறிகுறிகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும். ஆரம்ப கட்டத்தில் புறாக்களுடன இருப்பதை தவிா்த்து சிகிச்சையைத் தொடங்கினால், அது மேலும் சிக்கல்களைத் தவிா்க்க உதவியாக இருக்கும். ஆனால், பிந்தைய நிலைகளில் இது இரு நுரையீரல்களின் ஃபிப்ரோஸிஸுக்கு வழிவகுக்கும். இது இறுதியில் மரணத்தை ஏற்படுத்திவிடும் என்றாா் அவா்.

தில்லி மாநகராட்சியின் இந்த முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டால் தில்லியில் வழக்கமாக நடைபாதைகள், ரவுண்டானாக்கள், சாலை சந்திப்புகளில் புறாக்களுக்கு உணவிடப்படும் இடங்கள் விரைவில் மூடப்படலாம்.

Related posts

Andheri West Constituency: BJP’s Ameet Satam Faces Political, Civic Challenges In Bid For Third Term

Maharashtra Assembly Elections 2024: Mahayuti, MVA Unveil Second And Third Lists

Maharashtra Assembly Elections 2024: With Just Two Days Left For Nominations, Political Parties Still Wrangle Over Seat Sharing