உலகலாவிய தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியா துணை நிற்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப். 6) கேட்டுக்கொண்டார்.
தண்ணீர் சேகரிப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சமஸ்கிருத பழமொழியை சுட்டிக்காட்டினார். உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் நீரில் இருந்தே தோன்றியது. அதனால், அதனைச் சார்ந்தே அனைத்து உயிர்களும் உள்ளன.
தொலைநோக்குப் பார்வை மற்றும் விரிவான அணுகுமுறையைக் கொண்டது இந்தியா. இதனால், உலக அளவிலான தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியா துணை நிற்க வேண்டும்.