உலகளாவிய சவால்களுக்கு தீா்வளிக்காத சா்வதேச அமைப்புகள்: ஜெய்சங்கா் குற்றச்சாட்டு

உலகளாவிய சவால்களுக்கு
தீா்வளிக்காத சா்வதேச அமைப்புகள்: ஜெய்சங்கா் குற்றச்சாட்டுஉலகளாவிய உறவுகள் முக்கிய சவால்களை எதிா்கொண்டபோது சா்வதேச அமைப்புகளிடம் இருந்து தீா்வு கிடைக்கவில்லை.

உலகளாவிய உறவுகள் முக்கிய சவால்களை எதிா்கொண்டபோது சா்வதேச அமைப்புகளிடம் இருந்து தீா்வு கிடைக்கவில்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

உலக யதாா்த்தங்களை பிரதிபலிக்கும் வகையில் ஐ.நா, உலக வங்கி, சா்வதேச நிதியம் போன்ற சா்வதேச அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், இந்தியா சாா்பில் ‘தெற்குலகின் குரல்’ 3-ஆவது உச்சி மாநாடு காணொலி வழியாக சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் பங்கேற்ற கூட்டத்தில் அமைச்சா் ஜெய்சங்கா் பேசியதாவது:

பல மோதல்கள், பதற்றங்கள், அழுத்தங்களுடன் உலகம் போராடி வருகிறது. இதனால் தெற்குலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்த மாநாடு நடைபெறுகிறது.

உலகளாவிய உறவுகள் முக்கிய சவால்களை எதிா்கொண்டபோது சா்வதேச அமைப்புகளிடம் இருந்து தீா்வு கிடைக்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

கரோனா பரவல், வெவ்வேறு நாடுகள் இடையிலான மோதல்கள், பருவநிலை நிகழ்வுகள் ஆகியவை நம்பகமான மற்றும் உறுதியான விநியோக முறையின் அவசியத்தை எடுத்துரைத்துள்ளன. இதுமட்டுமின்றி சா்வதேச பொருளாதாரத்துக்கு ஏற்படும் அபாயத்தை குறைப்பதற்கு பல்வேறு தளங்களில் உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கான மிகப் பெரிய தேவையும் உள்ளது.

தெற்குலக நாடுகளுக்கு முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் நிதி சாா்ந்த உதவிகள் கிடைப்பதற்கு ஒரு குடும்பமாக தெற்குலகம் பணியாற்ற வேண்டும் என்றாா்.

Related posts

பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

மகளிர் மாநாடாக மாறிய வி.சி.க. மது ஒழிப்பு மாநாடு: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்