உலகின் மிக வயதான பூனை உயிரிழப்பு

லண்டன்,

இங்கிலாந்தின் நார்விச் நகரை சேர்ந்த நபர் ஒருவர் ரோஸி என்ற பூனையை வளர்த்து வருகிறார். இந்த பூனை 1991-ல் பிறந்துள்ளது. இந்தாண்டு ஜூன் 1 ஆம் தேதி இந்த பூனை தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடியது.

அத்துடன், உலகின் மிக வயதான பூனை என்ற பெருமையோடு வலம் வந்தது. இந்த நிலையில், உடல்நலக்குறைவால் அவரது உரிமையாளரின் வீட்டில் இன்று உயிரிழந்தது. 33 ஆண்டுகள் வாழ்ந்த பூனை ரோஸியின் வாழ்நாளை மனித வாழ்நாளோடு ஒப்பிட்டால் இது 152 ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்க வாக்காளர்களிடம் கமலா ஹாரிசுக்கு அதிகரிக்கும் ஆதரவு – கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

சிந்து நதி நீர் ஒப்பந்த மறு ஆய்வு.. இந்தியாவின் நோட்டீசுக்கு பாகிஸ்தான் பதில்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்