உலக டேபிள் டென்னிஸ்: இந்திய வீராங்கனை மணிகா பத்ரா காலிறுதிக்கு தகுதி

இந்திய வீராங்கனை மணிகா பத்ரா , தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள பெர்னாடெட் சோக்சை எதிர்கொண்டார்.

மான்ட்பெல்லிர்,

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஸ் போட்டி பிரான்சில் உள்ள மான்ட்பெல்லிர் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 30-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா , தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள பெர்னாடெட் சோக்சை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 11-9, 6-11, 13-11, 11-9 என்ற செட் கணக்கில் பெர்னாடெட் சோக்சை (ருமேனியா) வீழ்த்தி மணிகா பத்ரா காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் மணிகா பத்ரா, சீனாவின் கியான் தியானியை எதிர்கொள்கிறார்.

Related posts

வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பது மக்களுக்கு நீதித் துறை மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது: நீதிபதி சி.டி.ரவிகுமார்

தீபாவளியின்போது நெரிசல் ஏற்பட்டால் சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை ரத்து செய்யலாம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு பண்டகசாலைகளில் நாளை முதல் தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை