உ.பி. அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு!

உத்தரப் பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை சமர்ப்பிப்பதற்கானக் காலக்கெடு ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு கடந்த ஆண்டில் வெளியிட்ட உத்தரவில், அரசு ஊழியர்கள் தங்களுடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்களை 'மானவ் சம்பதா' என்ற அரசு இணையதளத்தில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 31க்குள் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

உ.பி.யில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சம்பளத்திற்கு ஆபத்து… காரணம் என்ன?

சொத்து விவரங்களை சமர்ப்பிக்காதவர்களுக்கு இந்த மாத சம்பளம் வழங்கப்படாது மற்றும் பதவி உயர்வு பாதிக்கப்படும் என அறிவித்திருந்தனர்.

மானவ் சம்பதா என்பது மனிதவள மேம்பாட்டுத் துறைக்காக அரசால் வடிவமைக்கப்பட்ட இணைய தளமாகும். இதன்மூலம் ஆள்சேர்ப்பு, பணி நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம் போன்ற அரசின் மனிதவள மேலாண்மை குறித்த விவரங்கள் டிஜிட்டல் மயமாகப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அரசு ஊழியர்கள் அவர்களின் விவரங்களை இதில் பதிவு செய்யாவிட்டால் அவர்கள் விடுப்பு எடுத்ததாகப் பதிவாகி அவர்களின் சம்பளத்தைப் பெறுவதில் சிக்கல் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. உ.பி.யில் மட்டும் 17.8 லட்சம் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு நேரடி அரசு வேலை: உ.பி. முதல்வர்!

இந்த நிலையில், ”சொத்து விவரங்களைப் பதிவு செய்யாத அரசு ஊழியர்களுக்கான காலக்கெடு ஒரு மாத காலம் நீட்டிக்கப்படுகிறது. இப்போது வரை 74 சதவீதம் பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர்” என உ.பி. தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குநர் ஷிஷிர் தெரிவித்துள்ளார்.

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!