உ.பி.யில் மனைவியை தாக்கி, காதை அறுத்த கணவர் கைது

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் பஹ்ரைக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி. இவர் பட்காவ்லி கிராமத்தின் தலைவராக உள்ளார். இவரது கணவர் பல்ராம் மீது சுமார் 14 வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் பல்ராம் தனது மனைவி ஸ்ரீதேவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென ஸ்ரீதேவியை தாக்கிய அவர், அரிவாளால் அவரது காதை அறுத்துள்ளார். தொடர்ந்து அவரை ஒரு அறையில் வைத்து பூட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக நேற்று ஸ்ரீதேவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் பல்ராமை கைது செய்த போலீசார், அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related posts

பாலியல் பலாத்கார வழக்கு: நடிகர் சித்திக்கை கைது செய்ய இடைக்கால தடை; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மராட்டியத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு

லட்டு விவகாரம்: கடவுளை அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது – சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்