தனது எதிர்கால அரசியல் பொறுப்புகளை கட்சியும் அதன் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தீர்மானிப்பார் என்று ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்தார்.
தில்லி கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் கடந்த 18 மாதங்களாக திகார் சிறையிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு விடுவிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக சத்யேந்தர் ஜெயின் கூறுகையில்,
எனது அரசியல் பங்களிப்பு குறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் என்ன சொன்னாலும் அதைச் செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை பிற்பகலுக்கு மேல் ஜெயினுக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கி விடுவித்தது.